ஒருகாலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்துவந்தார். இருப்பினும் தற்போது ரீஎண்ட்ரீ கொடுத்து நடித்துள்ள படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
பாலா இயக்கத்தில் ஜோதிகா-ஜீ.வி.பிரகாஷ் நடித்திருந்த படம் நாச்சியார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.
தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் அனுஷ்காவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. அவர் ஒப்புக்கொண்டால் படப்பிடிக்கு நடக்கும் எனவும், ஒப்புக்கொள்ளாவிட்டால் நாச்சியார் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் எனவும் டோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.