அம்பாறையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் “திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திந்து பேச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. குறித்த பேரினவாத அமைப்புக்கு பக்கபலமாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி பொலன்னறுவை சென்றதை கேள்விக்கப்பட்ட இக்குழுவினர், (1) காலை முதல் இரவு வரை அவரை சந்திப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், ஜனாதிபதியின் வாயிற்கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நிலையில் குறித்த குழுவினர் திரும்பிவந்துள்ளனர்.
இதேவேளை, பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்கள் பலரும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மையம்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயக்கல்லிமலை சிலை வைப்பு விவகாரத்தில் குறித்த “திஹே கல்லிய” பேரினவாத அமைப்பு பின்னணியில் இருந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
