மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு
வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா ஹட்டன் உள்ளிட்ட பல
பகுதிகளில் மண்சரிவு, வெள்ளப் பெருக்கு என்பனவும் ஏற்பட்டுள்ளது.
நேற்று
(14) மாலை 03.00 மணியளவில் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி
பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் மூன்று மணித்தியாலங்கள் வரை நோட்டன் -
ஹட்டன் மார்க்க பஸ் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
மாலை 06.00 மணிவரை நோட்டன் - ஒஸ்போன் மற்றும் லக்ஷ்பான பகுதிக்கான பஸ் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
நோட்டன்
பிரிட்ஜ் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மண் மேட்டை அப்புரப்படுத்தி பாதையை
சீர் செய்த பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
மேலும், ஹட்டன்
நகர பகுதியில் ஹட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் மற்றும் தபாற்
கந்தோர் வளாகம் ஆகியன நீரில் மூழகிய நிலையில், குடியிருப்பொன்று
பகுதியளவில் சேதமானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நாவலப்பிட்டி நகரின் தாபாற்கந்தோர் வீதியும் நீரில் மூழ்கியதாக நவலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கினிகத்தேன
- ஹட்டன் பிரதான வீதியிலும் மண்மேடு சரிந்துள்ளமையினாலும் பாதைகளில்
வழுகல் தன்மை ஏற்பட்டுள்ளமையினாலும், வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு
பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், நோட்டன் -
விமலசுரேந்திர லக்ஷபான நீர்தேக்கம், காசல்ரீ மற்றும் மவுசாக்கலை
நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருகின்றமையினால் கரையோர
மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
