வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஒரு மாபெரும் அனர்த்தத்துக்கும் அழிவுக்கும் சமமானதாகும் என, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
“வவுனியா என்பது தமிழீழமா, அநுராதபுரம் என்பது தென்பகுதியின் நிஜ பூமியா என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது. காரணம், எவ்வித நீதி நியாயமின்றி, வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஆரோக்கியமான செயல் அல்ல.