திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் அன்றே இணையத்தில் படத்தை வெளியிட்டு திரையுலகினர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர்.
அதன்படி, மெர்சல் படம் வெளியான பிறகு, மூன்று நாட்கள் கழித்தே இணையதளத்தில் படத்தை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, மெர்சல் படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸின் இந்த முடிவு, படக்குழுவினருக்கு ஆறுதலை அளித்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸின் அட்மின் விஜய் ரசிகர் என்று கூறப்படுகிறது.
TAMIL ROCKERS
