(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு !


வந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.











மாணவர் ஒன்றியத்தின் தலைவர் டினேஸ்காந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி எம். ரவி, மற்றும் கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



இதன் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மொளன இறைவணக்கம் செலுத்தப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தின் தலைவரினால் ஈகைச் சுடரேற்றப்பட்டு பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


 அத்துடன் மாவீரர் தினத்தை கௌரவிக்கும் முகமாக உயிர் கொடுத்த வீரர்களுக்காக உதிரம் கொடுப்போம் எனும் தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை