வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.
விமான நிலைய மீட்புப் படையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீப்பற்றி எரியும் விமானத்துக்குள் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய சிலரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனமதித்தனர்.
மீட்கப்பட்ட சுமார் 20 பேரில் 8 பேர் உயிரிழந்ததாகவும் விமானத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.