சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தொலைத்தொடர்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதள பாவனை தடைசெய்யப்பட்டது.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.