முகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய செயலாளர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தற்பொழுதுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், புதிதாக சட்டங்களை கொண்டுவருவதிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேலும் கூறினார்.