ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசேன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம், 7ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இவர் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி , கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறும் முகமாலைக்கும் செல்லவுள்ளார்.