(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஜனாதிபதி ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு விஜயம் !

ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 மார்ச் 12 – 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மார்ச் மாதம் 13 ஆம் திகதி பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், மார்ச் 14 ஆம் திகதியன்று உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்காக அரச இராப்போசண விருந்தொன்றினையும் வழங்கவுள்ளார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது தொடர்பான பரஸ்பர விடயங்கள் குறித்து இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
சுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவை மேம்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பு(JICA) ஆகியவற்றுக்கிடையேயான யென் கடன் உடன்படிக்கையொன்று இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.
ஜப்பான் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் டோக்கியோ வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இணை அனுசரணை வழங்கப்படவுள்ள ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜப்பானிலுள்ள இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
ஜப்பானுக்கான இவ்விஜயத்திற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் ஆகியோரின் கூட்டு அழைப்பிற்கிணங்க, மார்ச் 11 ஆந் திகதி புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டணி ஸ்தாபிப்பு அங்கத்தவர்களின்(ISA) முதலாவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக 2018 மார்ச் 10 – 11 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் முப்பத்திரண்டிற்கும் மேற்பட்ட அரசத் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை 2018 பெப்வரி 12 ஆந் திகதி சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினரானது.
மாற்று சக்தி மூலமாக சூரியசக்தி வளங்களை மேம்படுத்துவதற்கான கூட்டணியை உருவாக்கல் மற்றும் கடகம் மற்றும் மகர ரேகைகளுக்கிடையே காணப்படும் சூரியசக்தி வளம் அதிகமுள்ள நாடுகளின் குறிப்பிட்ட சூரியசக்தி தொழில்நுட்ப பயன்படுத்துகை தேவையை அடையாளப்படுத்தல் ஆகியவையே இந்த சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மிகப்பெரிய குறிக்கோளாக அமைந்துள்ளது.
இந்த முயற்சியின் ஊடாக ISA ஆனது, சாத்தியமான சூரியசக்தி உற்பத்தி சூழல் நட்புறவான முறைமையில் காணப்படும் இடைவெளிகளை சுட்டிக்காட்டுவதும், சூரியசக்தி வளங்கள் அதிகமுள்ள நாடுகள் முகங்கொடுக்கும் பொதுவான பிரச்சினைகளாகவுள்ள உலகளாவிய ரீதியில் வளங்களை அணுகுதல், வள சமத்துவம் மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
மீளுறுவாக்க வள மூலங்களின் வாயிலாக மக்களின் அடிப்படை ஆற்றல் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக தேசத்திற்கான அடித்தளத்தை தயார்படுத்துவதற்கான அதன் கொள்கை பிரகடனத்திற்கிணங்க, இலங்கை அரசாங்கமானது ISA உடன் கைகோர்த்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை