(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

நள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்

நள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை வித்திக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் Viber சேவையின் தடை நீக்கப்பட்டது.

அதேவேளை இலங்கை வரவுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாளை மறுதினம் முதல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் தடைகள் நீக்கப்படலாம் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை