பலாங்கொடை அங்வான பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
24 வயதான இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.