எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது
அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 04ஆம் திகதி திங்கட்கிழமை
நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ்
காரியவசம் தெரிவித்தார்.
ஏதிர்வரும் 02ஆம் திகதி முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை
கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த குறிப்பிட்ட பாடத்திற்கான பரீட்சையை,
பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை
ஏற்று தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
பரீட்சையை திட்டமிட்டப்படி உரிய தினத்தில் நடாத்தாமல், அடுத்த நாள் 4ஆம்
திகதி திங்கட்கிழமை நடாத்துவதன் மூலம், பரீட்சை திணைக்களத்திற்கு மேலதிக
செலவும், சில கஷ்டங்களும் இருக்கின்றபோதும், முஸ்லிம்களின் புனித
பண்டிகையான ஹஜ் பெருநாள் தினத்தில் அந்தப் பரீட்சையை நடாத்துவது முஸ்லிம்
சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கவனத்திற்கொண்டே
இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும்
தெரிவித்தார்.
