சமகால நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன.
2015ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இலங்கை
அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தற்போதைய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை
அமைத்தன.
நாடு
எதிர்கொண்டிருந்த முக்கிய பிரச்சினைகளுக்கு இரண்டு பிரதான கட்சிகளின்
பங்களிப்புடன் தீர்வைக் காணும் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வi
முன்னிலைப்படுத்தியே இந்த அலசாங்கம் அமைக்கப்பட்டது.
முன்னர்
இருந்த நிர்வாகக் காலப்பகுதியில் பெறப்பட்ட பெருந்தொகை கடன் சுமையிலிருந்து
நாட்டை மீட்டெடுக்கும் சவாலை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டு
வருகின்றமை குறிப்படத்தக்கது.
