கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம்
27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சென்ற மாதம் நாடளாவிய ரீதியில் இப்பரீட்சை நடைபெற்று முடிந்தது.
இப்பரீட்சையின் ஆரம்ப கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகளும்
நிறைவடைந்துள்ளன.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்
பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை மார்ச் 28 ஆம் திகதி வௌியிட
திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.