நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் சிலதினங்கள் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில பகுதிகளில் குறிப்பாக மேற்கு , சப்ரகமுவ, மத்திய , கிழக்கு , ஊவா மாகாணங்களிலும் ,காலி, மாத்தறை ,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோர பிரதேசங்களின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
