எமக்கு முப்பது வருடகால கசப்பான யுத்தம் அனுபவம் மீண்டும் ஏற்படக்கூடாது என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றியபோது இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கமே நோக்கம் என்றும் கூறினார்.
எமக்கு முப்பது வருடகால யுத்தம் தொடர்பான கசப்பான அனுபவம் இருந்தது. இந்த அனுபவம் மீண்டும் ஏற்படக்கூடாது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்றே கோருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்தக் கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இரா சம்பந்தனும் ஏற்றுக்கொண்டுள்ளமை சிறப்பம்சம் என்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் அங்கு மேலும் தெரிவித்தார்.
