(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மழை காரணமாக பார ஊர்தி குடைசாய்ந்து சாரதி பலி - மட்டக்களப்பில் சம்பவம்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏறாவூர் மிச்நகரைச் சேர்ந்த முஹம்மத் பாயிஸ் (வயது 32) என்பவர் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இவர் கடந்த 6ஆம் திகதி திருகோணமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனியாக ஏறாவூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போது, பனிச்சங்கேணி எனுமிடத்தில் விபத்திற்கு உள்ளானார்.

அதிவேகமாக வரும்போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்து தலையில் படுகாயமேற்பட்டதால் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்திசாலையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும், அங்கு சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் பரிதாபகரமாக மரணமானார். இச்சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ரிதிதென்ன எனுமிடத்தில் நேற்று மாலை லொறியொன்று வீதியிலிருந்து வழுக்கி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் லொறியைச் செலுத்திச் சென்ற சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளாகிய அதேவேளை லொறிக்குச் சேதமேற்பட்டுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்தபோது வீதியில் பயணித்தக் கொண்டிருந்த லொறியே வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை