நாட்டில் , குறிப்பாக தென்மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில தினங்கள் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு , சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றர் மழை எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கிழக்கு மாகாண கடற்கரையோரத்தின் சில பிரதேசங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலமான காற்று வீசக்கூடும். பொதுமக்கள் மின்னலிலிருந்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
