(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

புகையிலைக்கு மாற்றாக வடக்கில் மரமுந்திரிகை பயிரிடத் திட்டம்!

வடக்கு மாகா­ணத்­தில் புகை­யி­லைக்கு மாற்­றுப் பயி­ராக மர முந்­தி­ரி­கையைப் பயி­ரி­டு­வது தொடர்­பில் மண்­ணின் தன்மை ஆரா­யப்­ப­ட­வுள்­ளது என வடக்கு விவ­சாய அமைச்­சின் உத­வித் திட்­ட­மி­டல் பணிப்­பா­ளர் ஈ. சுரேந்­தி­ர­நா­தன் தெரி­வித்­தார். வடக்கு மாகா­ணத்­தில் விவ­சா­யி­க­ளின் பிரச்­சினை­களைக் கேட்­ட­றி­யும் நிகழ்வு தற்­பொ­ழுது ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் நடை­பெற்று வரு­கின்­றது.
  
இதன்­போது விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­கள் அவர்­க­ளின் சம்­மே­ள­னங்­கள், சங்­கங்­கள் ஊடாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.அவற்­றில் முக்கியமானது புகை­யி­லைக்குப் பதி­லாக மாற்­றுப் ப­யிர் வேண்­டும் என்­ப­தா­கும். 2020ஆம் ஆண்­டு புகை­யிலை பயி­ரி­டு­வதை முற்­றா­கத் தடை­செய்யவேண்­டும் என்று அரசு தெரி­வித்­துள்­ளது.

விவ­சா­யி­க­ளின் முதன்மை வாழ்­வ­தா­ரப் பணப்­ப­யி­ராக இது உள்­ளது. ஆகவே இதற்­கான மாற்­றுப்­ப­யிர் வேண்­டும் என்று விவ­சா­யி­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.எனவே, இதற்­குப் பதி­லாக மர­முந்­தி­ரி­கை­யைப் பயி­ரி­டு­வது தொடர்­பில் தீவ­கப் பகு­தி­க­ளில் மண் பரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வுள்­ளது.

இதற்கு மர­முந்­தி­ரிகை கூட்­டுத்­தா­ப­னம் உத­வி­க­ளை­யும், ஆலோ­ச­னை­க­ளை­யும் வழங்­கு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது. தற்­போது ஒரு­கிலோ மர­முந்­தி­ரிகை இரண்டு ஆயி­ரம் ரூபா­ வ­ரை­யில் விற்­கப்­ப­டு­ கின்­றது. மரம் வளர்ந்து குறிப்­பிட்ட காலத்­துக்குப் பின்­னர் நீர் பாய்ச்­ச­வேண்­டிய அவ­சி­ய­ச­மும் இல்லை.ஆகவே இத­னை­யும் புகை­யி­லைக்­குப் பதி­லான மாற்­றுப்­ப­யி­ராக பயி­ரி­டு­வது தொடர்­பாக தொடர்ந்து ஆரா­ய­வுள்­ளோம். இதற்­காக முதல் கட்­ட­மாக தீவ­கப் பகு­தி­யில் மண் ஆரா­ய்ச்சி செய்­யப்­ப­ட­வுள்­ளது. மண்­ணின் தன்மை அடிப்­ப­டை­யில் மேல­திக நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும் என்­றார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை