பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக் குழு சிங்கப்பூரிலிருந்து நேற்று (02) இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 309 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையினால் ஏற்பாடு செய்திருந்த “இன்வெஸ்ட் லங்கா” மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.