புஸ்ஸசல்லாவ – உடகம அடபோகே பிரதேசத்தில் மாணவி ஒருவர் பாடசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடன பயிற்சி அறையின் அருகாமையில் மயக்கமுற்று வீழ்ந்த குறித்த மாணவி, கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சடலம் கம்பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து புஸ்ஸலாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.