Post views-
புத்தரின் படம் பொறிக்கப்பட்ட சேலையுடன் ஒருவர் கைது!
Published By: SPECIAL REPORT | Date: March 03, 2018
திருகோணமலை நகர் பகுதியிலுள்ள ஆடை வியாபார நிலையமொன்றில் புத்தரின் சின்னம் பொறிக்கப்பட்ட 10 சேலைகளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கடை உரிமையாளரை (02) காலை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், திருகோணமலை,
ராஐவரோதய வீதி,டபிள்யூ.சுந்தகலிங்கம் (61வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தரின் படம் பொறிக்கப்பட்ட சேலைகளை வைத்திருப்பதாக பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கடையை சோதனையிட்ட போது 10சேலைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தவுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.