தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சமாதானத்தின் தந்தை என போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
னிகர் ரொபினா பீ. மார்க்ஸ் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையே இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மத சகவாழ்வு என்பன குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நெல்சன் மண்டேலா சமாதானத்தின் சின்னமாக இருப்பதாகவும், இது உலகம் முழுவதிலுமுள்ள அபிப்பிராயம். அதற்கமைவாக, நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் யோசனையை உயர்ஸ்தானிகர் முன்வைத்தமையையிட்டு தாம் நன்றி தெரிவிப்பதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.