மியன்மாரிலிருந்து
கொண்டு வரப்பட்டுள்ள புத்தபெருமானின் திருவுருவச் சிலையை ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன முதன் முறையாக வழிபட்டார். இந்நிகழ்வு (25)
முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
மியன்மாரில் வசிக்கும் திரு. ஜயந்த
ராஜகருணா என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள இந்த புத்தபெருமானின்
திருவுருவ சிலை அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரைக்கு கொண்டு
செல்லப்படவுள்ளது.
ஜனாதிபதி;, புத்தபெருமானின்
திருவுருவச் சிலை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஜனாதிபதியின்;
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையை
நோக்கிய பயணம் ஆரம்பமானது.
அனுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி
விகாரையின் விகாராதிபதி வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கான பிரதான சங்க
நாயக்கர் வண. நுகேதென்னே பஞ்ஞானந்த நாயக்க தேரர் உள்ளி்ட்டோர் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
