(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இன்று அதிகாலை 4.00 மணி முதல் மண்சரிவு எச்சரிக்கை !

மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிலவினால், மண்சரிவு மற்றும் மண்மேடு  இடிந்து விழும் ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
 
இன்று அதிகாலை 4.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் 3 மாவட்டங்கள் மண்சரிவு ஆபத்துள்ள இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும்;, எஹலியகொட, அயகம, இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மடுல்ல, புளத்சிங்கள, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நுவரெலியாவின் லபுகல பிரதேசத்திலும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
 
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை