இவ்வருடம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார அறிவித்துள்ளார்.
மீள் மதிப்பீட்டு வேண்டுகோள் விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்தப் பாடசாலை அதிபர்கள் ஊடாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் நாடெங்கிலுமிருந்தும் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 585 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
