(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடவசதி!

கடந்த புதன்கிழமை (28.02.2018) இரவு அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பெரிய நீலாவணை பகுதியை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடவசதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனியார் வீடுகளில் இவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக மாதாந்த வாடகையாக 07 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்டு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மேற்படி மக்கள் அவர்களுடைய மாடி வீட்டுத் தொகுதி புனரமைப்புச் செய்யப்படும் வரை இந்த உதவித்தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட மக்களை மீள குடியமர்த்துவது தொடர்பாகவும், நஷ்டஈடு மற்றும் நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாகவும் உயர் மட்டக் கலந்துரையாடல் நேற்று(02.03.2018) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி. வணிகசிங்க தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை